சனி, 12 செப்டம்பர், 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeVB9V7lY7OK_DluQft9elwRJvMllOLzOzFK7eOdNqUOz-CEyjJJNGPqpKUYV-VG-mxeNnfj-HH1TVrNp8QLPoV1UjvMJS2Hg0-EmqNshjaopwp0Vp4LZ4pIoCPWNR1bXLvpq9WH7CXYc/s400/angel-59.pngஇந்த படத்தில் உள்ள தேவதை நேற்று என் கனவில் வந்து உனக்கு வேண்டிய பத்து வரங்கள் கேள் , அத்துடன் அதை பதிவாக வெளியிடு என்று கூறியது .



நான் கேட்ட வரங்கள் இதோ .........




  1. தமிழகத்தில் மின்வெட்டு இனிமேல் இல்லை என்ற நல்ல செய்தி விரைவில் வர வேண்டும் .
  2. அடுத்த பொது தேர்தலில் நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி இன்னொரு புது கட்சி தமிழகத்தில் தோன்ற கூடாது.
  3. இந்திய திரு நாட்டில் பிறந்து வளர்ந்து இங்கேயே படித்து பின் வெளிநாட்டில் வேலை பார்த்து அங்கேயே இருந்து கொண்டு இந்தியாவை தரகுறைவாக கூறும் சிலர் திருந்த வேண்டும்.
  4. உலகத்தரமான கல்வி இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
  5. அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களையும் , பணத்தையும் நம்பி அவர்களுக்கு ஓட்டு போடும் நிலை மாறவேண்டும்.
  6. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி பிறந்த இந்த நாட்டில் ஜாதிகள் பெயரிலேயே கட்சிகள் ஆரம்பிக்கும் அவலம் ஒழிய வேண்டும்.
  7. எங்கு சென்றாலும் அடி வாங்கும் தமிழனின் நிலை மாற வேண்டும்.
  8. இமயமலையை விட ஒயரத்தில் அதிகமாக நிற்கும் விலைவாசி குறைய வேண்டும்.
  9. உலகநாயகனின் கனவு படைப்பான ''மருதநாயகம்'' உருப்பெற வேண்டும்.
  10. என்னைபோலவே உன்னிடம் வரம் கேட்டவர்களின் வரங்கள் பலிக்க வேண்டும்.

பின்குறிப்பு : அப்பாடா ஒரு வழியாக நண்பனின் வரமும் பலித்தது , நானும் ஒரு பதிவை எழுதியும் விட்டேன்.

2 கருத்துகள்:

பின்பற்றுபவர்கள்