ஞாயிறு, 17 மே, 2009

இந்தியன் ப்ரீமியர் லீக்

மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக பரபரப்பு கிளப்பிய ஒன்று இது . எனக்கு என்னவோ இது இந்தியாவில் கிரிக்கெட் அழிவதற்கான ஆரம்பம் என்று தோன்றுகிறது.

பணம், பணம்,பணம் ...... இது மட்டுமே குறிக்கோளாககொண்டு இயங்கி வரும் பி சி சி ஐ மற்ற எதையுமே கண்டு கொள்வதில்லை .

முதலாவதாக அதிகபடியான எண்ணிக்கையில் ஓய்வே இல்லாமல் போட்டிகளை நடத்துவது .

அடுத்து அரைகுறையான ஆடைகளுடன் வெளிநாட்டு அழகிகளை ஆட விடுவதும் , அதை நேரடி ஒளி பரப்பு செய்யும் கோணங்களும் ஆபாசமாகி கொண்டே வருகிறது .

இது போல பல விஷயங்கள் இருந்த போதும் , தற்சமயம் விளையாட்டு வீரர்கள் அமரும் டக் அவுட் ஏரியா வில் அந்த அணியின் உரிமையாளர்கள் வந்து அமர்ந்து கொள்வது போன்ற அசிங்கமான உதாரணங்கள் நடை பெற தொடங்கி உள்ளது .

பணம் கொடுக்கிறார்கள் என்று இனி மேல் அவர்களை மைதானத்தின் உள்ளே வந்து போட்டி நடக்கும் போதே வீரர்களை திட்டவோ , கட்டி பிடிக்கவோ அல்லது தடுப்பு அரண் அமைக்கவோ அனுமதிக்கும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

2 கருத்துகள்:

  1. ///கட்டி பிடிக்கவோ அல்லது தடுப்பு அரண் அமைக்கவோ அனுமதிக்கும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.///

    இதுக்குக்கூடவா..,

    பதிலளிநீக்கு
  2. thamaimanam, tamilish, போன்ற திரட்டிகள்ள சேர்த்திடு நண்பா..,

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்